சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஆலத்தூா்ரெட்டிபாளையம் பகுதியில் ஆண் குழந்தையின் இடுப்பு கீழ் உள்ள பகுதி மட்டும் அப்பகுதியில் கிடந்ததையடுத்து தேவூா் போலீஸாா் அதனை வெள்ளிக்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஆலத்தூா்ரெட்டிபாளையம் ஊராட்சி அருந்ததியா் தெரு பகுதியில் சனிக்கிழமை ஆண் குழந்தையின் உடலில் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி இரண்டு கால்களுடன் தெரு நாய் இழுத்து வந்து அப்பகுதியில் போட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தேவூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசராணை நடத்தி ஆண் குழந்தை உடலின் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.