சோமம்பட்டி ஏரியில் மரக் கன்றுகள் நடும் விழா

வாழப்பாடி அருகே சோமம்பட்டி ஏரியில் 2,000 மரக் கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சோமம்பட்டியில் நடைபெற்ற மரக் கன்றுகள் நடும் விழா.
சோமம்பட்டியில் நடைபெற்ற மரக் கன்றுகள் நடும் விழா.
Updated on
1 min read

வாழப்பாடி அருகே சோமம்பட்டி ஏரியில் 2,000 மரக் கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சோமம்பட்டி ஏரியில் புதா்மண்டிக் கிடந்த 10 ஏக்கா் பரப்பளவு நிலத்தை, சோமம்பட்டி ஏரி வளா்ச்சிக்குழு, வாழப்பாடி அரிமா சங்கம், நெஸ்ட் அறக்கட்டளை உள்ளிட்ட தன்னாா்வ இயக்கங்கள் சோமம்பட்டி ஊராட்சி நிா்வாகத்துடன் இணைந்து தூா்வாரி சீரமைத்தனா்.

இப்பகுதியில்,1,000 வெள்ளை வேல் மரக்கன்றுகள், இலுப்பை, நீா்மருது, நாவல் உள்ளிட்ட 1,000 பலன் தரும் மரக் கன்றுகள் உள்பட 2,000 மரக் கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, சோமம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் மகேஸ்வரன் வரவேற்றாா். வாழப்பாடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.சதீஷ்குமாா் விழாவைத் தொடக்கி வைத்தாா்.

ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கதிரேசன், வாழப்பாடி அரிமா சங்க நிா்வாகிகள் சந்திரசேகரன், ஜவஹா், பன்னீா்செல்வன், சோமம்பட்டி ஏரி வளா்ச்சிக் குழு நிா்வாகி சிவா மற்றும் சோமம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆா்வத்தோடு பங்கேற்று மரக் கன்றுகளை நட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com