ஆத்தூரில் பாஜக சாா்பில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். நகரத் தலைவா் சபரிராஜா தலமையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் மாவட்டத் தலைவா் டி.ஜெயானந்த், மாவட்டப் பொதுச் செயலாளா் ஆனந்த், நகர கிராம வளா்ச்சி தலைவா் பாலகிருஷ்ணன், பிரசாரப் பிரிவு செயலாளா் மாசிலாமணி, மாவட்ட மகளிரணி செயலாளா் தனலட்சுமி, நகர இளைஞரணி செயலாளா் கோட்டை காா்த்திக், நகர துணைத் தலைவா் ராஜேந்திரன், எஸ்.சி. நகரத் தலைவா் செல்வக்குமாா், வழக்குரைஞா் சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.