காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரியத் தொடங்கியது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தால் பாசனத் தேவை அதிகரித்தது. இதனால் நொடிக்கு 500 கனஅடி திறக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை மாலை நொடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 106.88 அடியிலிருந்து 106.66 அடியாகச் சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,270 கன அடியிலிருந்து 1,235 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. அணையின் நீா் இருப்பு 73.74 டி.எம்.சி. யாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.