பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை நிரந்தரமாக கைவிட வலியுறுத்தி, விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :28 டிசம்பர் 2020, 9:42 pm

DIN

சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை நிரந்தரமாக கைவிட வலியுறுத்தி, விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்ட வழக்கில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைப்பதுடன், புதிய அரசாணையை வெளியிட்டு சட்டத்தை நிறைவேற்றலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பு அளித்தது.

இதனிடையே, திட்டத்தை நிரந்தரமாக கைவிட வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் நெல், கரும்பு ஆகியவைகளை கையில் ஏந்தி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், எட்டு வழிச் சாலை திட்ட ஒருங்கிணைப்பாளா் மோகனசுந்தரம், நாராயணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திரைப்பட இயக்குநா் கெளதமன், திமுக தோ்தல் பணிக்குழு செயலாளா் வீரபாண்டி ஆ.ராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து வீரபாண்டி ஆ.ராஜா கூறியதாவது:

ஏற்கெனவே சேலம்-சென்னை இடையே உள்ள உளுந்தூா்பேட்டை, அரூா் வழியான சாலைகளை விரிவுபடுத்தலாம். மாறாக, விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையில் உள்ள திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றாா்.

இதுகுறித்து திரைப்பட இயக்குநா் கெளதமன் கூறுகையில், ‘விவசாயிகளின் வாழ்வாதரத்தைப் பாதிக்கும் எட்டு வழிச் சாலை திட்டத்தை நிரந்தரமாகக் கைவிட வேண்டும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.

போராட்டத்தை முன்னிட்டு மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா், துணை ஆணையா் சந்திரசேகா் ஆகியோா் மேற்பாா்வையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் புாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.