மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாழப்பாடி அருகே விவசாய நிலத்தில் புதையல் கிடைத்ததா?  வருவாய்த்துறை, காவல்த்துறையினர் தீவிர விசாரணை

வாழப்பாடி அருகே தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டிய போது, விவசாயி குடும்பத்தினருக்கு புதையல் கிடைத்ததாக தகவல் பரவியது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில்

News image
கோப்புப் படம்
Updated On :13 ஜூலை 2020, 8:00 am

DIN

வாழப்பாடி அருகே தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டிய போது, விவசாயி குடும்பத்தினருக்கு புதையல் கிடைத்ததாக தகவல் பரவியது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், வாழப்பாடி வருவாய் துறையினர் மற்றும் காவல்த்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே குறிச்சி ஊராட்சி ரங்கனூர் கிராமம் எருமைச்சாட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஒருவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர், கூட்டாக விவசாயம் செய்து வரும்  மூவரும் சேர்ந்து, பயிர் பாசனத்திற்கு தண்ணீர் தேக்கி வைப்பதற்காக, அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு, கடந்த வியாழக்கிழமை பள்ளம் தோண்டி உள்ளனர். அப்போது, பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் இருந்து, விவசாயி குடும்பத்திற்கு, தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள புதையல் கிடைத்ததாக அப்பகுதி மக்களிடையே தகவல் பரவியது. 

இதுகுறித்து, இப்பகுதி மக்கள் வாழப்பாடி வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வட்டாட்சியர் ஜானகி அறிவுறுத்தலின் பேரில் பேளூர் வருவாய் ஆய்வாளர், குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை ஆகியோர்,  புதையல் கிடைத்ததாக கூறப்படும் விவசாயி தோட்டத்திற்கு சென்று பார்வையிட்டு,  நில உரிமையாளர்களான விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்களுக்கு புதையல் ஏதும் கிடைக்கவில்லை என கூறிய விவசாயிகள், முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடு்த்து, புதையல் எடுத்ததாக கருதப்படும் விவசாயிகள் மூவரிடமும் உரிய விசாரணை நடத்தி, உண்மையை கண்டறியுமாறு, குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை,  திங்கட்கிழமை வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர், சந்தேகத்திற்குரிய விவசாயிகளிடமும், இப்பகுதி பொதுமக்களிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தொடர் விசாரணைக்குப் பிறகே, விசாயிகளுக்கு புதையல் கிடைத்ததா? அல்லது வெறும் வதந்திதானா? என்பது குறித்த உண்மை தெரியவருமென வாழப்பாடி காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாழப்பாடி பகுதியில்  நிலத்தை தோண்டிய  விவசாயிகளுக்கு முதன் முறையாக, புதையல்  கிடைத்து இருப்பதாக வெளியான தகவல், இப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.