சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே குறிச்சி ஊராட்சி ரங்கனூர் கிராமம் எருமைச்சாட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஒருவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர், கூட்டாக விவசாயம் செய்து வரும் மூவரும் சேர்ந்து, பயிர் பாசனத்திற்கு தண்ணீர் தேக்கி வைப்பதற்காக, அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு, கடந்த வியாழக்கிழமை பள்ளம் தோண்டி உள்ளனர். அப்போது, பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் இருந்து, விவசாயி குடும்பத்திற்கு, தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள புதையல் கிடைத்ததாக அப்பகுதி மக்களிடையே தகவல் பரவியது.