வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சங்ககிரியில் நிகழாண்டு அதிகளவாக 44.4 மில்லிமீட்டர் மழைப்பொழிவு

சேலம் மாவட்டம், சங்ககிரியில் நிகழாண்டு ஐந்து மாதங்களில் வியாழக்கிழமை இரவு அதிகளவாக 44.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளன. 

News image
Updated On :29 மே 2020, 11:09 am

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரியில் நிகழாண்டு ஐந்து மாதங்களில் வியாழக்கிழமை இரவு அதிகளவாக 44.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளன. 

சங்ககிரியில் 2020ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி வியாழக்கிழமை இரவு 44.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த மாதங்களில் அதிகளவாக இம்மழை பெய்துள்ளன. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மழை ஏதும் பெய்ய வில்லை. ஏப்ரல் மாதம் முழுவதும் மொத்தம் 77.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி அதிகளவாக 34 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 

அதனையடுத்து நடப்பு மே மாதத்தில் 8ஆம் தேதி 12 மில்லி மீட்டரும், 14ம் தேதி 5.2 மில்லி மீட்டரும், 16ஆம் தேதி 5.1 மில்லி மீட்டரும், 18ஆம் தேதி 33 மில்லி மீட்டரும், 23ஆம் தேதி 29.2 மில்லி மீட்டரும் பெய்துள்ளன. நிகழாண்டு ஐந்து மாதங்களில் அதிகளவாக வியாழக்கிழமை இரவு 44.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதையடுத்து சங்ககிரி வட்ட விவசாயிகள் விவசாயப்பணிகளை தொடங்கியுள்ளனர். 

தேவூர் பகுதிகளில் விவசாயிகள் முன்பே பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களில் களர் செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.