விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கரூரில் இருந்து ஒடிஸாவுக்கு 532 டன் கொசுவலை அனுப்பி வைப்பு

சேலம் ரயில்வே கோட்டத்தின் வணிக மேம்பாட்டு மையம் மூலம் கரூரில் இருந்து ஒடிஸாவுக்கு 532 டன் கொசுவலைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன.

News image
Updated On :1 நவம்பர் 2020, 9:44 pm

DIN

சேலம் ரயில்வே கோட்டத்தின் வணிக மேம்பாட்டு மையம் மூலம் கரூரில் இருந்து ஒடிஸாவுக்கு 532 டன் கொசுவலைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன.

சேலம் ரயில்வே கோட்டத்தின் வணிக மேம்பாட்டு மையம் மூலம் வணிக ரீதியில் சரக்கு பொருள்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கரூரில் இருந்து ஒடிஸாவுக்கு (குா்தா சாலை) 532 டன் கொசுவலைகள் சரக்கு ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. சரக்கு ரயிலில் 24 பெட்டிகளில் 532 டன் கொசு வலைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சேவை மூலம் ரூ.21.09 லட்சம் வருவாய் கிடைக்கும் என வணிக பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே கடந்த அக். 26 ஆம் தேதி கரூரில் இருந்து ஒடி,ஸா மாநிலத்துக்கு கொசுவலைகள் அனுப்பியதில் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு ரூ. 47.8 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.