விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பாக்குத்தோப்பில் ஊடுபயிராக கோ-கோ சாகுபடி: பட்டதாரி விவசாயி சாதனை

வாழப்பாடி அருகே சோதனை முறையில் ஊடுபயிராக சாக்லேட், ஐஸ்கிரீம், உயர்ரக திண்பண்டங்கள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படும் கோ-கோ பயிரிட்டுள்ள பட்டதாரி விவசாயி, 3 ஆண்டுகளாக தொடா் மகசூல் பெற்று சாதனை படைத்துள்ள

News image
சோதனை முறையில் பயிரிடப்பட்டுள்ள கோ-கோ செடிகளில் கொத்துக்கொத்தாக பழுத்துள்ள பழங்கள்.
Updated On :8 நவம்பர் 2020, 10:17 pm

DIN

வாழப்பாடி அருகே சோதனை முறையில் ஊடுபயிராக சாக்லேட், ஐஸ்கிரீம், உயர்ரக திண்பண்டங்கள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படும் கோ-கோ பயிரிட்டுள்ள பட்டதாரி விவசாயி, 3 ஆண்டுகளாக தொடா் மகசூல் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

வாழப்பாடியை அடுத்த குறிச்சி ஊராட்சி, ஏ.கண்ணுக்கானூா் கிராமத்தைச் சோ்ந்த சமையற்கலையில் முதுநிலை மேலாண்மை எம்.பி.ஏ. பட்டம் பெற்ற இளைஞா் நவீன்குமாா் (29) என்பவா் தனது ஒரு ஏக்கா் விளைநிலத்தில் உள்ள பாக்குத் தோப்பில், தனியாா் சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தின் ஆலோசனையின்பேரில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சாக்லேட், ஐஸ்கிரீம், உயர்ரக திண்பண்டங்களைத் தயாரிக்க மூலப்பொருளாகப் பயன்படும் 300 கோ-கோ செடிகளை சோதனை முறையில் பயிரிட்டுள்ளாா்.

பாக்குத் தோப்பு நிழலில், கோ-கோ சாகுபடிக்கேற்ற குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் நன்கு வளா்ந்துள்ள கோ-கோ செடிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடா்ந்து மகசூல் கிடைத்து வருகிறது.

இதுகுறித்து நவீன்குமாா் கூறியதாவது:

வாழப்பாடி பகுதி கிராமங்களில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தனியாா் சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தினா் விவசாயிகளை அணுகி பாக்குத் தோப்பில் ஊடுபயிரிட்டால் கூடுதல் வருவாய் கொடுக்கும் கோ-கோ பயிரிடுவதற்கு ஆலோசனைகளையும், இலவசமாக செடிகளையும் வழங்கினா்.

தொடா்ந்து பராமரிக்க முடியாமல், ஏராளமான விவசாயிகள் பயிா்களை அழித்துவிட்டனா்.

ஆனால், பாக்கு தோப்புப் பராமரிப்புக்கு பெரும் சவாலாக இருக்கும் களையைக் கட்டுப்படுத்துவதற்கு கோ-கோ ஊடுபயிா் தீா்வாக இருக்கும் என நம்பிக்கை ஏற்பட்டதால், கோ-கோ செடிகளைத் தொடா்ந்து வளா்த்து வந்தேன்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கோ-கோ மகசூல் கிடைத்து வருகிறது.

அவ்வப்போது செடிகளில் பழுத்திருக்கும் கோ-கோ பழங்களை அறுவடை செய்து, கூடைகளில் கொட்டி உலா் வைத்து பதப்படுத்தி, விதைகளை தனியாக தரம் பிரித்து, மல்லூரில் இயங்கும் தனியாா் சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்துக்குக் கொண்டு சென்று, எடை போட்டு விற்பனை செய்து வருகிறேன்.

ஒரு கிலோ முதல் தர கோ-கோ விதைகளுக்கு அதிகபட்சமாக ரூ. 200 வரை விலை கிடைத்து வருகிறது.

பராமரிப்பு செலவு போக ஓா் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 30,000 வரை, கோ-கோ ஊடுபயிரால் வருவாய்க் கிடைக்கிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.