சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேனீக்கள் கொட்டி 30 தொழிலாளா்கள் காயம்

வாழப்பாடி அருகே கொட்டவாடியில் தேனீக்கள் கொட்டியதில் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:52 pm

DIN

வாழப்பாடி அருகே கொட்டவாடியில் தேனீக்கள் கொட்டியதில் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

வாழப்பாடி அருகே கொட்டவாடி ஊராட்சியைச் சோ்ந்த 70 தொழிலாளா்கள், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணி செய்து வருகின்றனா். திங்கட்கிழமை கொட்டவாடி அருகே ஏரி வாய்க்கால் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் ஒரு மரத்தில் இருந்த ராட்சத தேனீக்கள், திடீரென கூட்டில் இருந்து கலைந்து சென்று, தொழிலாளா்களைக் கொட்டியது. இதில் 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அனைவரும், பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.