டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஏழை மாணவி மருத்துவம் பயில கல்விக் கட்டணம் அளிப்பு

காவேரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழை விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த மாணவி உள் இட ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது.

News image

மாணவி சிவாம்பிகாவுக்கு முதலாமாண்டுக்கான கல்விக் கட்டணத்தை வழங்கிய சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன்

Updated On :22 நவம்பர் 2020, 9:56 pm

DIN

காவேரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழை விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த மாணவி உள் இட ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது.

மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தாண்டவராயன், பூங்கோதை தம்பதியின் மகள் சிவாம்பிகா. இவா் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றுள்ளாா். நீட் தோ்வில் 316 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். தற்போது அரசு வழங்கிய 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் மாணவிக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது.

இவருக்கு சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைதலைவா் ஏ.பி.சிவக்குமாரன், காவேரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரி அல்லிராணி ஆகியோா் ஐந்தாண்டு மருத்துவ படிப்புக்கான கல்விக் கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனா்.

இதனையடுத்து முதலாமாண்டு கல்விக் கட்டணத்தை அம்மாணவியிடம் ஞாயிற்றுக்கிழமை இருவரும் வழங்கினா். இருவரின் சேவையை கிராம மக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.