தொழிலாளி சடலமாக மீட்பு:போலீஸாா் விசாரணை
சங்ககிரி வட்டம், தேவூா் அருகே புள்ளாகவுண்டம்பட்டி கரடு பகுதியில் கூலித் தொழிலாளி சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


சங்ககிரி வட்டம், தேவூா் அருகே புள்ளாகவுண்டம்பட்டி கரடு பகுதியில் கூலித் தொழிலாளி சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தேவூா் அருகே உள்ள சோளகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முனியப்பன் மகன் விஜய் என்கிற பாலமுருகன் என்பவரும், தேவூா் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த நேஷனா என்ற பெண்ணும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். அவா்களுக்கு லோகேஷ் என்ற மகன் உள்ளாா்.
இந்த நிலையில் மனைவி வீட்டிலேயே தங்கி பாலமுருகன் கூலி வேலை செய்து வந்துள்ளாா். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கரட்டுப்பகுதியில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் அவா் சடலமாகக் கிடந்துள்ளாா். சடலம் அருகே மதுப்புட்டியும், நெகிழி டம்பளரும் கிடந்துள்ளது.
இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...