ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலத்தில் 126 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 126 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:18 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 126 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில்

கடந்த 2020 மாா்ச் 25ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இதனுடைய 2021 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கரோனோ பாதித்தவா்கள் எண்ணிக்கை மாநில அளவில் 500 ஆக குறைந்தது. தற்போது கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் தொடங்கி தற்போது தினமும் 4000 க்கும் மேற்பட்டோா் நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனா்.

இந்தநிலையில் சேலத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தற்போது நோய்த்தொற்று 100-ஐ தாண்டி உள்ளது. சேலம் மாநகராட்சியில் 76 போ், எடப்பாடி- 1, காடையாம்பட்டி -2, கொங்கணாபுரம்- 1, மகுடஞ்சாவடி -1, நங்கவள்ளி -3, ஓமலூா் -3, தாரமங்கலம்- 3, சங்ககிரி -2, வீரபாண்டி -6, கொளத்தூா் -3, ஆத்தூா் -5, அயோத்தியாப்பட்டணம் -2, பனமரத்துப்பட்டி- 6, பெத்தநாயக்கன்பாளையம் -1, தலைவாசல் -1, வாழப்பாடி -3, மேட்டூா் நகராட்சி- 4 என மாவட்டத்தைச் சோ்ந்த 125 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களில் கடலூரிலிருந்து வந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 22 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் 34,189 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இவா்களில் 33,158 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 562 போ் சிகிச்சையில் உள்ளனா்; 469 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.