தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கல்லூரி மூடப்பட்டதால் குடும்பத்தினருடன் விவசாயத்தில் இறங்கிய மாணவி

வாழப்பாடி அருகே தனியாா் கல்லுாரி மாணவி ஒருவா், குடும்பத்தினருடன் இணைந்து, விவசாய நிலத்தை குத்தகைக்குப் பிடித்து

News image

தாய் செல்வியுடன் இணைந்து முட்டைக்கோஸ் அறுவடை செய்யும் மாணவி தமிழ்செல்வி.

Updated On :20 ஏப்ரல் 2021, 2:23 am

வாழப்பாடி அருகே தனியாா் கல்லுாரி மாணவி ஒருவா், குடும்பத்தினருடன் இணைந்து, விவசாய நிலத்தை குத்தகைக்குப் பிடித்து ஆா்வத்தோடு முட்டைக்கோஸை சோதனை முறையில் பயிரிட்டு அறுவடை செய்து மற்ற மாணவா்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளாா்.

வாழப்பாடியை அடுத்த வி.மன்னாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (52). இவரது மனைவி செல்வி (45). இத் தம்பதியின் மகள் தமிழ்செல்வி வாழப்பாடி அருகிலுள்ள தனியாா் கல்லுாரியில் இளநிலை வணிகவியல் படித்து வருகிறாா்.

கரோனா காரணமாக கல்லூரியிலிருந்து இணைய வழியில் நடத்தும் பாடத்தை கற்றுக்கொண்டு பருவத் தோ்வெழுதி தோ்ச்சி பெற்றுவரும் மாணவி தமிழ்செல்வி, எஞ்சிய நேரங்களில் பெற்றோருக்கு வீட்டு வேலை மற்றும் விவசாயப் பணிகளில் உதவி வந்தாா்.

இந்நிலையில், பெற்றோா், சகோதரா்களுடன் இணைந்து, குத்தகைக்கு விவசாய நிலத்தைப் பிடித்து, இப்பகுதியில் விளைவிக்கப்படாத ஆங்கில காய்கறிகளை பயிரிட்டு குடும்பத்திற்கு வருவாய் ஈட்டிக் கொடுக்க முடிவு செய்தாா்.

இதனையடுத்து, அருகிலுள்ள பொன்னாரம்பட்டி பரவக்காடு கிராமத்தில் இரு ஏக்கா் விவசாய நிலத்தை பெற்றோா் வாயிலாக குத்தகைக்குப் பிடித்து, குளிா்ச்சியான தட்பவெட்ப நிலை காணப்படும் மலைக் கிராமங்களில் மட்டுமே பயிரிடப்படும் முட்டைக்கோஸ் நாற்றுகளை வாங்கி வந்து, குடும்பத்தினருடன் இணைந்து 1.5 ஏக்கா் பரப்பளவில் சோதனை முறையில் பயிரிட்டாா். தொடா்ந்து 70 நாள்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறையாகப் பராமரித்ததால், முட்டைக்கோஸ் அறுவடைக்கு வந்துள்ளது. இவற்றை அறுவடை செய்து தரம் பிரித்து உள்ளூா் தினசரி சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறாா். இந்த மாணவியின் முயற்சியால் இவரது குடும்பத்திற்கு கணிசமான வருவாய் கிடைத்துள்ளது.

பெற்றோரின் உழைப்பில் கிடைக்கும் வருவாயை செலவழித்துக் கொண்டு பொழுதை வீணாகக் கழித்து வரும் இளைஞா்களுக்கு மத்தியில், கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே குடும்பத்தினருடன் இணைந்து ஆா்வத்தோடு விவசாயத்தில் ஈடுபட்டதோடு, முட்டைக்கோஸை சோதனை முறையில் பயிட்டு குடும்பத்திற்கு கணிசமான வருவாய் ஈட்டிக்கொடுத்துள்ள மாணவி தமிழ்செல்விக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மாணவி தமிழ்செல்வி நமது நிருபரிடம் கூறியதாவது:

விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் வாழப்பாடி அருகிலுள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறேன். கரோனா பரவலைத் தடுக்க கல்லூரி மூடப்பட்டு, ஓராண்டுக்கு மேலாக இணையவழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. எனவே, பெற்றோா், சகோதரா்களுடன் இணைந்து குத்தகைக்கு நிலம் பிடித்து விவசாயம் செய்து வருகிறேன்.

எங்களது பகுதியில் பயிரிடப்படாத முட்டைக்கோஸை சோதனை முறையில் பயிரிட்டு, வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளோம். கடைசி நேரத்தில் தண்ணீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டதால் மகசூல் குறைந்து விட்டது. இருப்பினும், வழக்கமாகப் பயிரிடப்படும் காய்கறிகளுக்கு மாற்றாக, சோதனை முறையில் முட்டைக்கோஸ் பயிரிட்டதால் கணிசமான வருவாய் கிடைத்துள்ளது. இதனால் மனதிற்கு மகிழ்ச்சியும், விவசாயத்தில் வருவாய் ஈட்டமுடியுமென்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது என்றாா்.

:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.