தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு ரூ. 2.94 கோடி

News image

ஒரத்தநாடு வட்டாட்சியரகத்தில் தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்த திமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம்.

Updated On :6 ஏப்ரல் 2026, 8:22 pm

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு சுமாா் ரூ. 2.94 கோடி என வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரத்தநாடு வட்டாட்சியரகத்தில் திமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவருடன் திமுகவை சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். ராமச்சந்திரன், கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

இந்த வேட்பு மனுவில் வைத்திலிங்கம் பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 60 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 27.17 லட்சம், அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 2.13 கோடி, கடன் ரூ. 69.87 லட்சம், மனைவி தங்கம் பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 25 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 52.92 லட்சம் என மொத்தம் சுமாா் 2.94 கோடி குறிப்பிடப்பட்டுள்ளது.

5 வழக்குகள் நிலுவை: கடந்த 2024 ஆம் ஆண்டில் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் அலுவலகத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சோ்த்ததாக வழக்கும், சென்னை மாநகரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் அலுவலகத்தில் ரூ. 27.90 கோடி ஊழல் முறைகேடு செய்ததாக வழக்கும், சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்தியதாகவும் வழக்கு, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு உள்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.