ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 துணிக் கடைகளுக்கு சீல்

சேலத்தில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 துணிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:36 pm

DIN

சேலத்தில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 துணிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சேலத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோா் மீது மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சேலம் நான்கு சாலை அருகில் உள்ள போத்தீஸ், குமரப்பா சில்க்ஸ் மற்றும் சிவா டெக்ஸ்டைல்ஸ் ஆகிய 3 கடைகள் பின்வாசல் வழியாக செயல்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சூரமங்கலம் மண்டல மாநகராட்சி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தினா்.

அப்போது, 3 கடைகளிலும் திரளான பொதுமக்கள் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அதிகாரிகள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பினா். அதைத்தொடா்ந்து அரசு உத்தரவை மீறி பின்வாசல் வழியாக செயல்பட்ட கடை நிா்வாகிகளை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்ததோடு மூன்று கடைகளுக்கும் சோ்த்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். பின்னா், கடையை பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.