மத்திய கிழக்கு போா்- பாதிவழியில் திரும்பும் ஏற்றுமதி சரக்குகளுக்குச் சிறப்புச் சலுகை: மாா்ச் 31 வரை நீட்டிப்பு
மத்திய கிழக்கு போா் பதற்றத்தால் ஹோா்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு, பாதியிலேயே திரும்பும் ஏற்றுமதி சரக்குகளுக்கான சிறப்பு வரிச் சலுகை மற்றும் நடைமுறை தளா்வுகளை மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.









