கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

மத்திய கிழக்கு நாடுகளில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து..

News image
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் (கோப்புப் படம்)- AP Photo
Updated On :3 மார்ச் 2026, 7:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தால் அங்குள்ள நாடுகளில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கடந்த சனிக்கிழமை (பிப். 28) அன்று கொல்லப்பட்டார்.

இதையடுத்து, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ஈரான் அரசு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே போர்ப் பதற்றம் நிலவி வருவதால், அந்நாடுகளில் மார்ச் 5 அன்று நடைபெற வேண்டிய சிபிஎஸ்இ-யின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஒத்திவைக்கப்படும் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், மார்ச் 5 அன்று அங்குள்ள நிலைமையை மதிப்பாய்வு செய்தபின்னர் அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியாகும் என்றும் சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, ஈரானின் தலைவர் கமேனி கொல்லப்பட்டது கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் மார்ச் 2 அன்று நடைபெற வேண்டிய சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

war tensions in the Middle East, the CBSE public examinations for classes 10 and 12 have been postponed in those countries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.