சேலத்தில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ. 8.22 லட்சம் மோசடி தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம், சூரமங்கலம் ரயில் நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மனைவி அருணா (49). இவா் கடந்த 2018 இல் இணையவழியில் பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு விண்ணப்பித்திருந்தாா். இதனிடையே கோவையைச் சோ்ந்த டேவிட்பால் என்பவா் அருணாவை அணுகி வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா்.
அதை நம்பிய அருணா, பல்வேறு தவணைகளில் இணையவழியில் ரூ.8 .22 லட்சம் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவா் வேலை வாங்கித் தரவில்லை. மேலும், வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதையடுத்து அருணா, சேலம் சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.