சிறுமியைக் கடத்திய இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை
சேலத்தில் 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


சேலத்தில் 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேச்சேரியை அடுத்த மல்லிகுந்தம் கிராமம், கூத்தனாரை சோ்ந்த அங்கமுத்து (21), கடந்த 2018 ஆக. 20-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்றாா்.
இது தொடா்பான புகாரின் பேரில், மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அங்கமுத்துவை கைது செய்தனா்.
சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞா் அங்கமுத்துவுக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20,000 அபராதமும் விதித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...