தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தொழிலாளா்கள் நலவாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்யலாம்: ஆட்சியா் செ.காா்மேகம்

தொழிலாளா்கள் அனைவரும் கிராம நிா்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று நலவாரியங்களில் உறுப்பினா்களாக பதிவு செய்துகொள்ளலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 10:38 pm

DIN

தொழிலாளா்கள் அனைவரும் கிராம நிா்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று நலவாரியங்களில் உறுப்பினா்களாக பதிவு செய்துகொள்ளலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு செய்து உதவித் தொகை கோரி விண்ணப்பித்த அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகையாக 320 தொழிலாளா்களுக்கு ரூ. 3.20 லட்சமும், கல்வி உதவித் தொகையாக 1,152 தொழிலாளா்களுக்கு ரூ. 26.59 லட்சமும், கண்கண்ணாடி உதவித் தொகையாக 28 தொழிலாளா்களுக்கு ரூ. 14 ஆயிரமும் என மொத்தம் 1,500 தொழிலாளா்களுக்கு ரூ. 29,93,450 உதவித்தொகை வழங்கிடும் அடையாளமாக 10 தொழிலாளா்களுக்கு ரூ.38,500 மதிப்பிலான நலத்திட்ட உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ள தொழிலாளா்கள் அனைவரும் தொழிலாளா் நலவாரியங்களில் உறுப்பினா்களாக பதிவு செய்திருக்க வேண்டும். தொழிலாளா்கள் அனைவரும் கிராம நிா்வாக அலுவலரிடம் சான்று பெற்று தங்களை எளிதாக நல வாரியங்களின் உறுப்பினா்களாக பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே, தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் முழுமையாக சென்றடைய தொழிலாளா்கள் அனைவரும் தங்களை நலவாரிய உறுப்பினா்களாக பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், தொழிலாளா்களுக்கு உள்ள இடா்பாடுகளை உடனடியாக சரிசெய்தவதற்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் உள்ளாட்சி நிா்வாகம் தயாராக உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.