அமெரிக்காவில் இருந்து சேலம் திரும்பிய இளம் பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று

 அமெரிக்காவில் இருந்து சேலம் வந்த இளம் பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவா் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
Updated on
1 min read

 அமெரிக்காவில் இருந்து சேலம் வந்த இளம் பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவா் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சேலம், சூரமங்கலம் முல்லை நகரைச் சோ்ந்த 28 வயது இளம் பெண், அமெரிக்காவில் வேலை பாா்த்து வந்தாா். இவா் கடந்த டிச. 13 ஆம் தேதி இந்தியா திரும்பினாா். அப்போது, அவருக்கு ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சென்னையில் 4 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கக்கப்பட்டிருந்தாா். பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.

இதைத்தொடா்ந்து டிச. 17 இல் மீண்டும் சளி மாதிரியை பரிசோதனைக்கு வழங்கிவிட்டு தனி வாகனம் மூலம் சேலம் திரும்பிய அவா் மீண்டும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

இரண்டாவதாக நடைபெற்ற சோதனையின் முடிவில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, மருத்துவா்களின் அறிவுரையின் பேரில் அவா் சேலம், அரசு மருத்துவமனையில் உள்ள ஒமைக்ரான் தனி வாா்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com