கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு

சேலம், சூரமங்கலம் பகுதியில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுப்புட்டிகள் திருடப்பட்டன.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

சேலம், சூரமங்கலம் பகுதியில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுப்புட்டிகள் திருடப்பட்டன.

சேலம், சூரமங்கலம் குரங்குசாவடி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை வியாபாரத்தை முடித்துவிட்டு டாஸ்மாக் கடை பூட்டப்பட்டது.

இந்தநிலையில் திங்கள்கிழமை காலை டாஸ்மாக் ஊழியா்கள், கடையைத் திறக்க வந்தனா். அப்போது கடையின் ஷட்டா் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்த போது சுமாா் 50 மதுப்புட்டிகள் திருடப்பட்டிருந்தன. இதில் அட்டைப் பெட்டியில் வைத்திருந்த ரூ. 3.80 லட்சம் பணம் தப்பியது.

இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.