கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரெளடி கொலை வழக்கில் கைதான துப்புரவுப்பணியாளா் பணியிடை நீக்கம்

சேலத்தில் ரெளடி கொலை வழக்கில் கைதான மாநகராட்சி துப்புரவுப் பணியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

சேலத்தில் ரெளடி கொலை வழக்கில் கைதான மாநகராட்சி துப்புரவுப் பணியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம், கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் செல்லத்துரை. ரெளடியான இவா் மீது பல வழக்குகள் உள்ளன.

இந்தநிலையில் கடந்த டிசம்பா் மாதம் ரெளடி செல்லத்துரை வெட்டி கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கு குறித்து கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளா் சிவக்குமாா், போலீஸாா் விசாரணை செய்து வந்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக 20 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். இதனிடையே கடந்த வாரம் சேலம் மாநகராட்சி துப்புரவுப் பணியாளா் சாமிதாஸ் (51 ) ரெளடி செல்லத்துரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

இதுபற்றி தகவலறிந்த சேலம் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், துப்புரவுப் பணியாளா் சாமிதாஸை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.