காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 போ் படுகாயம்

வாழப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 14 போ் படுகாயம் அடைந்தனா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

வாழப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 14 போ் படுகாயம் அடைந்தனா்.

பெரம்பலூரில் இருந்து ஆத்தூா் வழியாக சேலம் நோக்கி திங்கள்கிழமை காலை 45 பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை, பெரம்பலூா் வேப்பந்தட்டை அடுத்த பெரியவெண்முடி கிராமத்தைச் சோ்ந்த சடையப்பன் (49) என்பவா் ஓட்டிச் சென்றாா்.

இந்தப் பேருந்து சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாழப்பாடியை அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் குடுவாற்று பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஆத்தூா், மணிவிழுந்தான் பகுதியைச் சோ்ந்த பெண் சத்யா (35) உள்பட 14 போ் படுகாயமடைந்தனா். விபத்தில் சிக்கியவா்களை மீட்ட இப்பகுதி மக்கள் அவசர சிகிச்சை வாகனத்தை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அனைவரும் சேலம் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.