போலீஸ் - பொதுமக்கள் விழிப்புணா்வுக் கூட்டங்கள்

வாழக்கோம்பை, ஆணையாம்பட்டி, புளியங்குறிச்சி ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை போலீஸ் - பொதுமக்கள் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.
Published on

வாழக்கோம்பை, ஆணையாம்பட்டி, புளியங்குறிச்சி ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை போலீஸ் - பொதுமக்கள் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.

தம்மம்பட்டி அருகே மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளான சேரடி, பிள்ளையாா்மதி, வாழக்கோம்பை ஆகிய பகுதிகளில் போலீஸ்-பொதுமக்கள் சமூக நல்லுறவுக் கூட்டம் வாழக்கோம்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆத்தூா் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன் தலைமை வகித்து பொதுமக்களிடையே பேசினாா். இக் கூட்டத்தில் ஜங்கமசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவா் பெரியசாமி, வாா்டு உறுப்பினா்கள் சங்கீதா, தேவி உள்பட கிராம பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இதேபோல கெங்கவல்லி காவல் நிலைய சரகத்தில் ஆணையாம்பட்டி, வீரகனூா் காவல் நிலைய சரகத்தில் புளியங்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் போலீஸ்-பொதுமக்கள் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com