ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கொங்கணாபுரம் சந்தையில்கால்நடைகள் விற்பனை அதிகரிப்பு

பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில், கொங்கணாபுரம் கால்நடைச் சந்தையில் ஆடு, மாடு, கோழிகள், சண்டைசேவல்கள் விற்பனை அதிகரித்துள்ளன.

News image
Updated On :9 ஜனவரி 2021, 10:09 pm

DIN

எடப்பாடி: பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில், கொங்கணாபுரம் கால்நடைச் சந்தையில் ஆடு, மாடு, கோழிகள், சண்டைசேவல்கள் விற்பனை அதிகரித்துள்ளன.

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் கால்நடை சந்தை இயங்கி வருகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இச்சந்தையில், ஆடு, மாடு, கோழிகள், சண்டைசேவல், பந்தையப்புறாக்கள் என பல்வேறு கால்நடைகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

கடந்த எட்டு மாதங்களாக கரோனா பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், இச் சந்தை மூடப்பட்டிருந்தது. அண்மைக் காலமாக மீண்டும் சந்தை செயல்பட தொடங்கிய நிலையில், இச்சந்தையில் கால்நடை விற்பனை மந்தமாகவே நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற கொங்கணாபுரம் கால்நடைச் சந்தைக்கு, வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள்

வருகை அதிகரித்திருந்த நிலையில், கால்நடைகளின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக இறைச்சிக்கு ஆடுகள் அதிகஅளவில் விற்பனையாயின. பறவைக்காய்சல் அச்சம் காரணமாக கறிக்கோழி , நாட்டுக்கோழி, சண்டைசேவல், பந்தையப்புறா விற்பனை வழக்கத்தை விட சற்று குறைவாகவே இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.