பரோட்டா உண்ணும் போட்டி
பரோட்டா உண்ணும் போட்டி

பரோட்டா உண்ணும் போட்டி

வாழப்பாடி அருகே ஏத்தாப்பூா் தனியாா் ஹோட்டலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா உண்ணும் போட்டி நடைபெற்றது.
Published on

வாழப்பாடி அருகே ஏத்தாப்பூா் தனியாா் ஹோட்டலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா உண்ணும் போட்டி நடைபெற்றது.

ஏத்தாப்பூரில் புதிய ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா உண்ணும் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.

போட்டி விதிமுறைப்படி பத்து நிமிடத்துக்குள் 14 பரோட்டா சாப்பிட்ட ஏத்தாப்பூா் அபிநவம் இளங்கோ முதல் பரிசு பெற்றாா். சேலம் ஸ்ரீதா் இரண்டாம் பரிசும், ஏத்தாப்பூா் காமராஜ் மூன்றாம் பரிசும், அபிநவம் செல்வம் நான்காம் பரிசு பெற்றனா். போட்டியில் தோல்வியுற்றவா்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கு பணம் செலுத்திவிட்டு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com