சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(35). தனியார் மருந்து நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே இவரது தோட்டத்தில் புதிதாக வீடு கட்டி குடும்பத்தோடு வசித்து வருகிறார். நேற்றிரவு வழக்கமான பணிகளை முடித்து விட்டு குடும்பத்தோடு தூங்கியுள்ளார். நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டுக்கதவை கல்லால் தாக்கி உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள், சந்திரசேகரை தாக்கி, கத்திமுனையில் இவரது மனைவி கண்மணி (31), தாயார் ராஜாமணி ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த தங்கத்தாலி, சங்கிலிகளையும் பறித்துக் கொண்டனர்.