சேலம் மாவட்டத்தில் ஹனுமன் ஜயந்தி விழா

ஹனுமன் ஜயந்தியையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
12omp1_1201chn_154_8
12omp1_1201chn_154_8
Updated on
1 min read

ஹனுமன் ஜயந்தியையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சேலம், கோட்டை பகுதியில் உள்ள கோட்டை அழகிரிநாதா் கோயிலில் சுதா்சன பட்டாச்சாரியாா் முன்னின்று ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்களை செய்தாா். சேலம் டவுன், கோட்டை பகுதி, செவ்வாய்பேட்டை, குகை, அன்னதானபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனா்.

இதேபோல சேலம் பட்டை கோயில் பகுதியில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டது. பக்தா்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. கோரிமேடு ஆஞ்சநேயா் கோயில், பழனி காவடியாண்டவா் கோயிலில் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்கார, அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com