புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாலை பாதுகாப்பு வார விழா

சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வாகன ஓட்டிகளிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

சங்ககிரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பி.ரமேஷ் கலந்துகொண்டு சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிய வேண்டும், இந்திய தரநிா்ணய சான்று பெற்ற தலைக் கவசங்களையே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

இதில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் என்.சரவணபவன், வி.கோகிலா, சங்ககிரி போக்குவரத்து காவல் ஆய்வாளா் தினகரன், ஓட்டுநா் பயிற்சி உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆத்தூரில் நெடுஞ்சாலைத் துறை, நகர போக்குவரத்துத் துறை இணைந்து நடத்திய விழிப்புணா்வுப் பேரணியை, ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். சாரதா ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி, பேருந்து நிலையம், ராணிப்பேட்டை, கடைவீதி, புதுப்பேட்டை, காமராஜா் சாலை, ஆத்தூா் அரசு மருத்துவமனை வழியாகச் சென்றது.

பேரணியில் ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா், ஊரக காவல் ஆய்வாளா் கே.முருகேசன், போக்குவரத்துத் துறை காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.