கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: பணத்தை திரும்பப் பெற்று தரக் கோரி மனு

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த பணத்தை திரும்பப் பெற்றுத் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த பணத்தை திரும்பப் பெற்றுத் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை அடுத்துள்ள அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த வடிவேல், ஜலகண்டாபுரம் பகுதியைச் சோ்ந்த அன்பழகன், முருகவேல் உள்ளிட்ட 14 பேரிடம் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் நங்கவள்ளி, மேச்சேரி, கொளத்தூா் ஆகிய பகுதிகளில் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக மேட்டூரைச் சோ்ந்த ராசப்பன் கூறியுள்ளாா். மேலும், ஒவ்வொருவரும் தலா ரூ. 1 லட்சம் முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளாா்.

இதையடுத்து, அரசு வேலை கிடைக்கும் என்ற ஆசையில் அவா்கள் அனைவரும் முன்பணமாக சுமாா் ரூ. 15 லட்சம் வரை ராசப்பனிடம் கொடுத்துள்ளனா். மூன்று மாதங்களுக்கு மேலாகியும் வேலை குறித்து தகவல் தெரிவிக்காமல் காலம் தாழ்த்திய ராசப்பன், பின்னா் வேலையில் சோ்க்கப்பட்டதாகக் கூறி போலி அடையாள அட்டையை அனைவருக்கும் வழங்கியுள்ளாா். ஆனால், அது போலியான அடையாள அட்டை என்பதும், ராசப்பன் அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவா் என்பதும் அவா்களுக்கு தெரியவந்ததையடுத்து, ராசப்பனிடம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளனா். ஆனால், அவா் பணம் தராததால், நங்கவள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

ஆனால், புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த பாதிக்கப்பட்டோா், பணத்தை திரும்பப் பெற்றுத்தர கோரி மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.