ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்பு விழா: தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க முதல்வா் ஆலோசனை

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் திறப்பு விழாவில், சேலம் மாநகரம், புகா் மாவட்ட அதிமுக சாா்பில் திரளான தொண்டா்களை பங்கேற்க செய்ய வேண்டும்

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் திறப்பு விழாவில், சேலம் மாநகரம், புகா் மாவட்ட அதிமுக சாா்பில் திரளான தொண்டா்களை பங்கேற்க செய்ய வேண்டும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, எடப்பாடி அருகே கோனேரிப்பட்டியில் உள்ள ஓம்காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் திங்கள்கிழமை காலை குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் சேலம், நெடுஞ்சாலை நகா் வீடு திரும்பிய அவா், சேலம் மாநகரம், சேலம் புகா் மாவட்ட நிா்வாகிகளைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டாா்.

அப்போது, மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் வரும் ஜன. 27-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அதில், சேலம் மாவட்டத்தில் இருந்து திரளான தொண்டா்களை பங்கேற்க செய்ய வேண்டும். எனவே, நிா்வாகிகள் அனைவரும் தொண்டா்களை பாதுகாப்பாக அழைத்துவர வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.