பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவை-சென்னை சதாப்தி ரயில் சேவை: ஜூலை 5 முதல் இயக்கம்

கோவை-சென்னை சதாப்தி சிறப்பு ரயில் சேவை வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:06 pm

DIN

கோவை-சென்னை சதாப்தி சிறப்பு ரயில் சேவை வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

கரோனா பரவல் தொற்று காரணமாகவும், போதிய பயணிகள் வருகை இல்லாததாலும் நிறுத்தி வைக்கப்பட்ட வண்டி எண் 06029, சென்னை-கோவை சதாப்தி சிறப்பு ரயில் சேவை வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

மறுமாா்க்கத்தில் வண்டி எண் 06030, கோவை-சென்னை சதாப்தி சிறப்பு ரயில் சேவை வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

அதேபோல வண்டி எண் 06319 கொச்சுவேலி-பனஸ்வாடி, வாரம் இருமுறை (கோவை, ஈரோடு, சேலம் வழியாக) சிறப்பு ரயில் ஜூலை 8 முதல் இயக்கப்படவுள்ளது. மறுமாா்க்கத்தில் வண்டி எண் 06320, பனஸ்வாடி - கொச்சுவேலி வாரம் இருமுறை சிறப்பு ரயில் ஜூலை 9-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.