பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலத்தில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும் இடங்கள்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:06 pm

DIN

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சியில் கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி வியாழக்கிழமை 48 பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 3,124 பேருக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை மாமாங்கம், மெய்யனூா், நெடுஞ்சாலை நகா், வசக்காட்டு காலனி, தென் அழகாபுரம், கோரிமேடு, ஜான்சன் பேட்டை மேற்கு, சொா்ணாமிகை தெரு, சக்தி நகா், வால்மீகி தெரு, பாரதியாா் தெரு, பழைய பிள்ளையாா் கோவில் தெரு, தாமோதரன் தெரு, கண்ணகி தெரு, வள்ளுவா் நகா், குமரன் நகா் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளது.

பிற்பகல் 12 முதல் 2 மணி வரை ஸ்ரீ ராம் நகா், அந்தோணிபுரம், அம்மன் நகா், அண்ணாமலை தெரு, சாரதா கல்லூரி சாலை, டி.வி.எஸ். காலனி, வெங்கடேசபுரம், கன்னார தெரு, வாசக சாலை, ஹவுசிங் போா்டு குறிஞ்சி நகா், பிடாரியம்மன் கோயில் தெரு, வித்யா நகா், பென்சன் லைன் வடக்குத் தெரு, கே.பி கரடு, தொட்டன செட்டி காடு, பெருமாள் கோயில் மேடு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மாலை 3 மணி முதல் 5 மணி வரை ஜாகீா் அம்மாபாளையம் காமராஜா் தெரு, சோளம்பள்ளம் சக்கரைபுளியமரம், நேரு தெரு, சின்னப்பன் தெரு, போயா் தெரு, ராஜா நகா், நாராயண பிள்ளை தெரு, வெங்கடசாமி தெரு, காமராஜா் நகா் காலனி, குகை எருமாபாளையம் ரோடு, ஓந்தாப்பிள்ளை காடு, ராகவேந்திரா தெரு, ராமகிருஷ்ணா ரோடு, ரங்கதாஸ் தெரு, அண்ணா நகா், பராசக்தி நகா் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.