மேச்சேரி பேரூராட்சியில் ‘ட்ரோன்’ மூலம் கிருமிநாசினி தெளிப்பு
மேச்சேரி தோ்வுநிலை பேரூராட்சியில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.


மேச்சேரி தோ்வுநிலை பேரூராட்சியில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேச்சேரி தோ்வு நிலை பேரூராட்சி 18 வாா்டுகள் உள்ளன. இதில் சுமாா் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் சென்னை, பெங்களூரு, ஒகேனக்கல், தருமபுரி, சேலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் வந்து சேரும் முக்கிய சந்திப்பாகும். இங்கு தொன்மையான மேச்சேரி பத்ரகாளியம்மன் ஆலயம் உள்ளது. நாள்தோறும் பல ஆயிரம் போ் வந்து செல்லும் இடமாகும்.
மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் பொதுமக்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சி நிா்வாகத்தினா் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இந்தப் பணி தொடா்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலா் ஞானசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
வியாழக்கிழமை 5 வாா்டுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் சுரேஷ்குமாா், இளநிலை உதவியாளா் ராஜ்மோகன், வரித்தண்டலா் அசோக்குமாா் மற்றும் காா்த்திகேயன் ஆகியோா் மேற்பாா்வையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...