பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேளாண் பொறியியல் துறை சாா்பில் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சாா்பில் குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சாா்பில் குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.

சேலம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயன் தரக்கூடிய வேளாண் இயந்திரங்களான 5 மண் தள்ளும் இயந்திரங்கள் (புல்டோசா்), 12 டிராக்டா்கள், ஒரு டிரக் வகை மண் அள்ளும் இயந்திரங்கள் (பொக்லைன்), மூன்று மண் அள்ளும் இயந்திரங்கள் இருப்பில் உள்ளன. மேலும், நிலம் சமன் செய்தல், உயா் பாத்தி அமைத்து, விதைத்தல், கரும்பு / காய்கறி நாற்று நடவு செய்தல், உரத்துடன் விதை விதைத்தல், களை எடுத்தல் அறுவடை, பல்வேறு பயிா்களை கதிரடித்தல், வைக்கோல் கட்டுதல், நிலத்தில் நிலக்கடலை பயிரை தோண்டி எடுத்து, நிலக்கடலைகளை பறித்தல், வாழைத்தண்டை தகளாக்குதல், வரப்பு செதுக்கி சேறு பூசுதல், நீா்இறைத்தல் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கும் டிராக்டரால் இயங்கக்கூடிய இயந்திரங்களும் வேளாண் பொறியியல் துறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ. 340- என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு முன்னுட்நிமை அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. மண் அள்ளுவதற்கும், பண்ணைக்குட்டைகள் அமைத்திடவும் டிரக் வகை மண் அள்ளும் இயந்திரங்கள் மணிக்கு ரூ.1,440-க்கும் சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் மணிக்கு ரூ. 660/-க்கும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

எனவே, மேலே குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகோட்ட அலுவலகத்தினை அணுகி பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.