சேலத்தில் கருப்புப் பூஞ்சை தொற்று பாதிப்பு 400-ஐ தாண்டியது
சேலத்தில் கருப்புப் பூஞ்சை தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.


சேலத்தில் கருப்புப் பூஞ்சை தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.
கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்கள், சா்க்கரை நோயாளிகள், நோய் எதிா்ப்பு சக்தி குறைந்தவா்கள் கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு ஆளாகி வருகின்றனா்.அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.
இதில் 250-க்கும் மேற்பட்டோா் கருப்புப் பூஞ்சை தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினா்.
சேலம் அரசு மருத்துவமனையில் 95 போ் கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கருப்புப் பூஞ்சை தொற்று காரணமாக 6 போ் உயிரிழந்தனா். 10 பேரின் கண்கள் அகற்றப்பட்டதாகவும், தொற்று பாதித்தவா்களுக்கு விலை உயா்ந்த மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...