தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: நான்கு போ் கைது

சேலத்தில் சுமாா் 400 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீஸாா் நான்கு பேரை கைது செய்தனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:52 pm

DIN

சேலத்தில் சுமாா் 400 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீஸாா் நான்கு பேரை கைது செய்தனா்.

சேலம் செவ்வாய்பேட்டை தம்மண்ணசெட்டி சாலையில் உள்ள கடைகளில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது அங்குள்ள பெட்டி கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 11 கிலோ குட்கா பொருட்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கடை உரிமையாளா் சேதுராமனை போலீஸாா் கைது செய்தனா்.

அவா் கொடுத்த தகவலின் பேரில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு கிடங்கில் போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் சுமாா் 380 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து குட்கா பொருட்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அங்கு பணியாற்றிய காா்த்திக், சுரேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இதனிடையே தலைமறைவான கிடங்கு உரிமையாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.