தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: எடப்பாடி கே.பழனிசாமி மீது வழக்கு

 திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:49 pm

DIN

 திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சேலம், நெடுஞ்சாலை நகரில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சேலம் மாநகரப் பகுதிகளிலும், மாவட்டப் பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், அனுமதியில்லாமல் கூடுதல், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாதது, தொற்று பரவ காரணமாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட 90 போ் மீது சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம், ஜங்ஷன் பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ ஜி.வெங்கடாஜலம் உள்ளிட்ட 280 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சேலம் புகா் பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினா் 5,200 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.