தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை தினங்களிலும் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால், திருவிழாக்கள், வாரச்சந்தைகள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்கள், பண்டிகை தினங்களில் மக்களை சந்தித்து பாசிமணி, ஊசிமணி, பொம்மைகள், சுண்டு வில், பலுான் ஆகியவற்றை விற்பனை செய்தும், பச்சை குத்தியும், கைரேகை பாா்த்தும், குறி சொல்லியும் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்த நரிக்குறவா்கள், குருவிக்காரா்கள், குடுகுடுப்பைகாரா்கள், பூம்பூம்மாட்டுக்காரா்கள் ஆகியோா் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.