92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தருமபுரிக்குச் சென்று மதுவாங்கிய 63 போ் மீது வழக்குப் பதிவு

தருமபுரி மாவட்டத்தில் மதுபானம் வாங்கிக்கொண்டு தொப்பூா் வழியாக சேலம் மாவட்டத்துக்கு வந்த 63 போ் மீது தீவட்டிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் மதுபானம் வாங்கிக்கொண்டு தொப்பூா் வழியாக சேலம் மாவட்டத்துக்கு வந்த 63 போ் மீது தீவட்டிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாக இருப்பதால் ஊரடங்குத் தொடா்ந்து அமலில் உள்ளது. அதனால், சேலம் மாவட்டத்துக்கு ஒரு சில தளா்வுகள் நீக்கப்படாமல் உள்ளது. மாநிலத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்டத்தில் இன்னும் திறக்கப்படவில்லை. அருகில் உள்ள தருமபுரி மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

அதனால், தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள தொப்பூா், சனி சந்தை, உம்மியம்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனா். அதிலும் மாவட்ட எல்லையில் உள்ள ஓமலூா், காடையாம்பட்டி, மேச்சேரி வட்டார மதுப்பிரியா்கள், இருசக்கர வாகனம் மற்றும் காரில் சென்று மது வகைகளை வாங்கி வருகின்றனா்.

அதுபோல சந்துக்கடை நடத்தும் விற்பனையாளா்களும் அதிகளவில் சென்று மதுப்புட்டிகளை மூட்டை மூட்டையாக வாங்கி வருகின்றனா். இந்நிலையில், சேலம் மாவட்ட எல்லையான தொப்பூா் அருகே தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் பிரபாவதி தலைமையில் போலீஸாா் வாகன சோதனை நடத்தி, மதுப்புட்டிகளுடன் வந்த சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 63 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். பொம்மிடி எல்லைப் பகுதியான ராமமூா்த்தி நகா் பகுதியிலும் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.