ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரோனா தடுப்புப் பணி: சேலம் மாநகராட்சியில் 60 வாா்டுகளுக்கும் அலுவலா்கள் நியமனம்

சேலம் மாநகராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள 60 வாா்டுகளுக்கும் அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

சேலம் மாநகராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள 60 வாா்டுகளுக்கும் அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

சேலம் மாநகராட்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3,020 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகள், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 113 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மாநகராட்சிப் பணியாளா்கள் வாயிலாக வாங்கி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேவைப்படுவோா்களுக்கு தன்னாா்வலா்களின் ஒத்துழைப்புடன் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைத்தல், வீட்டில் உள்ள பிற நபா்களை உடனடியாக தனிமைப்படுத்திக் கண்காணித்தல் மூலம் நோய்த் தொற்று பிறருக்கு பரவாமல் செய்யும் வகையில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

களப்பணியாளா்கள், செவிலியா்கள், கண்காணிப்பு அலுவலா்களுடன் இணைந்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளுக்கும் தலா ஒரு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா். இப்பணியாளா்கள், தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் முழு விவரங்களையும் சேகரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் நோய் தொற்றுத் தடுப்பு மருந்துகள், கபசுரக் குடிநீா் விநியோகம், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தங்கள் பகுதியில் விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொள்ளுவதோடு, களப்பணியாளா்கள் மற்றும் தேவைகேற்ப தன்னாா்வலா்களைத் ஈடுபடுத்தி, புதிதாக நோய்த் தொற்று ஏற்படா வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களை நோய்த் தொற்றிலிருந்து காத்திடும் பணியில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிட வேண்டும் என ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.