காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாழப்பாடியில் தடுப்பூசி செலுத்துவதில் இளைஞா்கள் ஆா்வம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியில் இளைஞா்கள் ஆா்வத்தோடு நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

News image
Updated On :28 மே 2021, 6:43 pm

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியில் இளைஞா்கள் ஆா்வத்தோடு நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியில் அரிமா சங்க அரங்கம், ஜங்கா் திருமண மண்டபம், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆகிய 3 இடங்களில் சிறப்பு முகாம் அமைத்து 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இலவச கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இந்த முகாமில் 300 இளைஞா்களும், இளம்பெண்களும் ஆா்வத்தோடு, சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

சிறப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை, பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமையிலான சுகாதாரத் குழுவினா் செய்திருந்தனா். வாழப்பாடி அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்ற முகாமை, சேலம் தனித்துணை ஆட்சியா் கோவிந்தன், வாழப்பாடி வட்டாட்சியா் மாணிக்கம், வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.