சங்ககிரி: தில்லை விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை
சங்ககிரி தெலுங்கர் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு தில்லை விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சனிக்கிழமை மாலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.


சங்ககிரி தெலுங்கர் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு தில்லை விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சனிக்கிழமை மாலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், சங்ககிரி நகரின் மையப்பகுதியில், தெலுங்கர் தெரு வீதியில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த மன்னர் காலத்தில் ஒரேகல்லால் வடிவமைக்கப்பட்டுள்ள அருள்மிகு தில்லை விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டியும், கரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டுமென்று வேண்டியும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி கோயில் அர்ச்சகர் மட்டுமே பூஜைகளை செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...