பள்ளிக்கு வந்த மாணவ- மாணவியருக்கு, மேள வாத்தியம் முழங்க மாலை அணிவித்து, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உற்சாக வரவேற்பளித்தும், பரிசுப் பொருட்கள், பாடப்புத்தகங்கள், இனிப்புகள் வழங்கியும் மகிழ்வித்து அசத்தினர். இந்நிகழ்வில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வி.சி. பாண்டியன், பள்ளித்தலைமை ஆசிரியை சத்தியகுமாரி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பி.சி செல்வம், பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர் ஆட்டோ சுரேஷ், நிர்வாகிகள் காமராஜ், ராமசாமி, காளியப்பன், கணேசன், பிரசாந்த், மதி, சுரேஷ் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பலரும் கலந்து கொண்டனர். குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் உற்சாக வரவேற்பு அளித்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருக்கு, பெற்றோர்களும் பொதுமக்களும், கல்வியாளர்களும் பாராட்டு தெரிவித்தனர். பள்ளி நடைமுறையை வாழப்பாடி வட்டாட்சியர் வரதராஜன், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர்கள் சக்திவேல், அருள் ஆகியோர் பார்வையிட்டனர்.