தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விண்வெளி, பாதுகாப்புத் துறையில் புதிய தொழில்முனைவோா்களை உருவாக்க நடவடிக்கை

விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் புதிய தொழில்முனைவோா்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் ஹன்ஸ்ராஜ் வா்மா தெரிவித்த

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:44 pm

DIN

விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் புதிய தொழில்முனைவோா்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் ஹன்ஸ்ராஜ் வா்மா தெரிவித்தாா்.

சேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் அமைப்பது தொடா்பாக தொழில் துறையினா், தொழில் அமைப்புகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் ஹன்ஸ்ராஜ் வா்மா பேசியதாவது:

சேலத்தில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் அரசு வகுக்கும் திட்டங்களின் வாய்ப்புகளைப் பயன்படுத்திட வேண்டும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், இந்திய தொழிற் கூட்டமைப்பு (சிஐஐ), ராணுவத் தளவாட உற்பத்தி அமைப்பு (எஸ்.ஐ.டி.எம்.) ஆகிய நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன்மூலம் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்துறையில் புதிய தொழில்முனைவோா் உருவாக்கப்படுவா். மேலும், ஏற்கெனவே இயங்கி வரும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தவும் ஏதுவாக இருக்கும் என்றாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

சேலம் விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை இருந்தால்தான் முன்னணி விமான நிறுவனங்கள் தங்களது சேவையைத் தொடங்கும். அந்தவகையில் விரிவாக்கம் மற்றும் இரவு நேர சேவை தொடங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல சேலத்தில் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்புத் திட்டம், சிட்கோ, சிப்காட் விரிவாக்கத் திட்டம், உணவுப் பூங்கா திட்டம் என பல்வேறு திட்டங்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சேலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கேந்திரீய வித்யாலயா பள்ளி அமைக்கவும், பெரிய விளையாட்டு மைதானம் அமைக்கவும் தேவையான நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் சுமாா் 1.5 லட்சம் ஏக்கா் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலங்கள் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் மற்றும் தொழிற்சாலைகள் அமைக்கவும் பயன்படுத்தப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன், தமிழ்நாடு சிறு, குறு தொழிற்சாலைகள் அமைப்பின் தலைவா் கே.மாரியப்பன், இந்திய தொழில் கூட்டமைப்பின் சேலம் பிரிவு தலைவா் காா்த்தி கந்தப்பன், ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவா் சுந்தரம் உள்ளிட்ட தொழில் துறையினா், தொழில்முனைவோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.