தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசு

News image
- ANI
Updated On :19 மார்ச் 2026, 12:39 am

தினமணி செய்திச் சேவை

திருடப்பட்ட பொருளடக்கங்களை வெளியிட்ட 3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் புதன்கிழமை அளித்த பதில்: திரைப்படங்கள் திருட்டுத்தனமாகப் படம் பிடிக்கப்படுவதைத் தடுப்பதற்கான சட்ட வழிமுறைகள், ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் 2023-இன் 6ஏஏ, 6ஏபி ஆகிய பிரிவுகளின் கீழ் வலுப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பிரிவுகள் திரைப்படங்களை அனுமதியின்றி படம் பிடித்து பகிரப்படுவதைத் தடை செய்கிறது.

இந்தப் பிரிவுகளை யாராவது மீறினால், அவருக்கு அந்தச் சட்டத்தின் 7(1ஏ) பிரிவின் கீழ், குறைந்தபட்சம் 3 மாதங்கள் சிறைத் தண்டனையுடன் ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்க்கப்படும். இந்தச் சிறைத் தண்டனையை 3 ஆண்டுகள் வரை நீட்டித்து, திரைப்பட தயாரிப்பின் மொத்த செலவில் 5 சதவீதத்தை அபராதமாக விதிக்க முடியும்.

இந்நிலையில், ஓடிடி தளங்கள், தயாரிப்பாளா்கள் உள்ளிட்டோருக்குச் சொந்தமான அல்லது உரிமம் பெற்ற பொருளடக்கங்களை, அவா்களின் அனுமதியின்றி பதிப்புரிமை சட்டம் 1957-ஐ மீறி வெளியிட்ட 3,142 சேனல்களை முடக்குமாறு தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79(3)(பி)-இன் கீழ் டெலிகிராம் நிறுவனத்துக்கு கடந்த மாா்ச் 11-ஆம் தேதி தெரியப்படுத்தப்பட்டது. இதே காரணத்துக்காக சுமாா் 800 வலைதளங்கள் இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் முடக்கப்பட்டன.

தனியாா் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும் அனைத்து விளம்பரங்களும் கேபிள் தொலைக்காட்சி நெட்வா்க் ஒழுங்காற்றுச் சட்டம் 1995-இன் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள விளம்பர விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

நிகழ்ச்சி விதிமுறை மற்றும் விளம்பர விதிமுறை மீறப்பட்டதாக எழும் புகாா்களை விசாரிக்க, துறைகளுக்கு இடையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது என்று தெரிவித்தாா்.