தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சேலம் காஸ் சிலிண்டா் வெடி விபத்து:பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி

சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு, அரசு புதிதாக வீடு கட்டித் தர வேண்டும் என சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:06 pm

DIN

சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு, அரசு புதிதாக வீடு கட்டித் தர வேண்டும் என சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம், கருங்கல்பட்டி பகுதியில் வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்து அடுத்தடுத்த வீடுகள் இடிந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். மேலும், 12 போ் காயமடைந்தனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கருங்கல்பட்டிக்குச் சென்று விபத்து நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்த எடப்பாடி கே.பழனிசாமி, பாதிக்கப்பட்டவா்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கருங்கல்பட்டி, பாண்டுரங்கவிட்டல் தெருவில் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்து வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அரசு சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்தவா்கள் சாதாரண குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களுக்கு அரசு வீடு கட்டித் தர வேண்டும் அல்லது வீடு கட்டுவதற்கு தேவையான நிதி உதவி வழங்க வேண்டும். சமையல் செய்யும் போது எரிவாயு உருளையில் கசிவு உள்ளதா என்பதை பரிசோதித்த பிறகே அடுப்பைப் பற்றவைக்க வேண்டும் என்றாா்.

பின்னா், இந்த விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். முன்னாள் அமைச்சா் செ.செம்மலை, முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.வெங்கடாஜலம், சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.