கடம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம் கடம்பூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம்  நடைபெற்றது.
கடம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை 
கடம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம் கடம்பூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கெங்கவல்லி  ஒன்றிய பொறியாளர் தெய்வராணி, கடம்பூர் ஊராட்சித் தலைவர் உமா சுப்ரமணியன், துணை தலைவர் கௌசல்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி அண்ணாதுரை, கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலர் வாசுகி, சேலம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (DIET) விரிவுரையாளர் கலைவாணன், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் செல்வம், உயர்நிலைப்பள்ளி கல்விக்குழுத் தலைவர் ராஜசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கடம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, தீர்மானம் இயற்ற வேண்டி கோரிக்கை விண்ணப்பத்தினை அதிகாரிகளிடம் பொதுமக்கள், பெற்றோர் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com